கிழக்கு மாகாண கல்வி முன்னேற்றத்தை மத்திய கல்வி அமைச்சு பாழ்படுத்துகிறதா? – கிழக்கின் முன்னாள் முதல்வர் கேள்வி

Posted by - November 7, 2017

கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை முன்னேற்றத்தை பாழ்படுத்துவதற்கு  மத்திய கல்வியமைச்சு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் கேள்வி எழுப்பியுள்ளார். வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகளின் பெற்றோருடனான சந்திப்பு ஏறாவூரில் உள்ள முன்னாள் முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றபோது இந்த விடயத்தை அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வித்துறை வீழ்ச்சிக்கு  ஆசிரியர் பற்றாக்குறை பிரதான பிரச்சினையாக உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியர்களை

நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லும் நாம் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­றோம்! -அமெரிக்கா

Posted by - November 7, 2017

சிறிலங்காவின் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் குறித்­தும், போருக்­குப் பின்­ன­ரான நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லும் நாம் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­றோம்.

எறுமை மாட்டை மோதிய எம்புலன்ஸ்

Posted by - November 7, 2017

திருகோணமலை கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டி எருமை மாட்டுடன் நேற்றிரவு (06) மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் வாகனம் சேதமடைந்துள்ளதாக கோமரங்கடவெல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளை வாகனத்தை நோக்கி எருமை மாடு வேகமாக வந்து மோதியதாகவும் அதனால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் அம்பியுலன்ஸ் சாரதி காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கிய எருமை மாடு அவ்விடத்தில் வீழ்ந்து கிடப்பதாகவும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை

பெட்ரோல் தட்டுப்பாட்டினால் தொடருந்து தொழிற்சங்கத்தின் போராட்டம்

Posted by - November 7, 2017

பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து தொழிற்சங்க சம்மேளனங்கள் பல ஒன்றிணைந்து நாளை நள்ளிரவு தொடக்கம் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ள தயாராகின்றனர். இலங்கை தொடரூந்து கட்டுப்பாட்டு சங்கத்தின் பிரதான செயலாளர் பி.எம்.பி பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், பிரதியமைச்சர் வழங்கிய உறுதிமொழியினை அடுத்து போராட்டத்தை கைவிட்டோம். அவர் இரண்டு வாரங்களுக்குள் தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் அவர்

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தலைமைகள் சரியாக செயற்படவில்லை- டக்ளஸ் தேவாநந்தா

Posted by - November 7, 2017

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தலைமைகள் சரியாக செயற்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேற்றையதினம் அவர் சந்தித்திருந்தார். இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். குரல் – டக்ளஸ்

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக விசேட புலமைப் பரிசில்

Posted by - November 7, 2017

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திப் பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக விசேட புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த் குமார் குறிப்பிட்டுள்ளார். – அரவிந்த் –

இடைக்கால அறிக்கையில் சமஷ்டியின் பணிகள்

Posted by - November 7, 2017

அரசியல் யாப்பு வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கையில் சமஷ்டியின் பணிகள் இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் புதுக்குடியிருப்பு நிர்வாகிகளை தெரிவு செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியானது ஒற்றையாட்சியை நீக்கி, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற ஆழமான கொள்கையின் ஊடாகவே பயணிக்கிறது என்றும், அந்த இலக்கு இடைக்கால அறிக்கையிலும் இருக்கிறது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன்

தேர்தல் வர்த்தமானியில் சிக்கல், மீண்டும் திருத்தத்துக்கு அனுப்பி வைப்பு

Posted by - November 7, 2017

உள்ளுராட்சி சபைகளுக்குரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி  அறிவித்தல் இவ்வார இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வர்த்தமானியின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள போதிலும், அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க மீண்டும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியா விஜயம்

Posted by - November 7, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நீண்ட ஆசிய விஜயத்தின் முதற்கட்டமாக ஜப்பான் சென்ற அவர், இன்று தென்கொரியா சென்றுள்ளார். அமெரிக்க- தென்கொரிய கூட்டு இராணுவ செயற்பாடுகள் மற்றும் வடகொரியாவின் அணுவாயுத சோதனைகள் என்பவற்றை மையப்படுத்தி, பிராந்தியத்தில் பதற்ற நிலை நிலவுகிறது. தென்கொரியாவுடனான அமெரிக்காவின் இராணுவ தொடர்புகளுக்கு வடகொரியா எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது. இவ்வாறான சூழ்நிலையிலேயே டொனால்ட் ட்ரம்ப் தமது விஜயத்தை மேற்கொள்கிறார். வடகொரியாவினால் ஏற்படும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, டொனால்ட் ட்ரம்பின்

நாடு முழுவதும் பெற்றோல் விநியோகம்

Posted by - November 7, 2017

2400 மெட்ரிக் டன் பெற்றோல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது. இன்றையதினம் நாடு முழுவதும் 2400 மெட்ரிக் டன் பெற்றோல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது. கனிய எண்ணைக் வள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசஙி;க இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினமும் இதே அளவான பெற்றல் விநியோகம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாளையதினம் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை அடையும் என்றும், 9ம் திகதி காலை முதல் பெற்றோல் விநியோகம் சீரடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில்