எறுமை மாட்டை மோதிய எம்புலன்ஸ்

19446 0

திருகோணமலை கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டி எருமை மாட்டுடன் நேற்றிரவு (06) மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் வாகனம் சேதமடைந்துள்ளதாக கோமரங்கடவெல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளை வாகனத்தை நோக்கி எருமை மாடு வேகமாக வந்து மோதியதாகவும் அதனால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் அம்பியுலன்ஸ் சாரதி காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய எருமை மாடு அவ்விடத்தில் வீழ்ந்து கிடப்பதாகவும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்சென்ற நோயாளியை மஹதிவுல்வௌ பிரதேச  அம்பியுலன்ஸ் வண்டியில் கொண்டு சென்றதாகவும் கோமரங்கடவெல காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a comment