நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லும் நாம் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­றோம்! -அமெரிக்கா

417 0

சிறிலங்காவின் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் குறித்­தும், போருக்­குப் பின்­ன­ரான நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லும் நாம் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­றோம்.

2015ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நல்­லாட்சி அர­சின் மூலம், அனைத்து இன மக்­க­ளுக்­கு­மான சுதந்­தி­ரம் உறு­தி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று நினைக்­கி­றோம்.

போருக்குப் பின்­ன­ரான அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள் தொடர்­பில் இலங்கை மேற்­கொள்ள வேண்­டி­ய­வை­கள் மற்­றும் அபி­வி­ருத்தித் திட்­டங்­கள் தொடர்­பில் அமெ­ரிக்கா ஆலோ­சனை வழங்கி வரு­கின்­றது.

இவ்­வாறு அமெ­ரிக்­கா­வின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லர் தோமஸ் சானொன் தெரி­வித்­தார்.
இலங்கை வந்­துள்ள உத­விச் செய­லர் தோமஸ் சானொன், இலங்கை அய­லு­ற­வுத்­துறை அமைச்­சின் செய­லர் பிர­சாத் காரி­ய­வ­சத்­து­டன் பேச்சு நடத்­திய பின்­னர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நல்­லி­ணக்­கம், பொதுப் பாது­காப்பு அபி­வி­ருத்­திச் செயன்­முறை தொடர்­பில் ஆராய இலங்­கைப் பய­ணம் மிக­வும் பய­னுள்­ள­தாக அமைந்­தது.
இலங்­கை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள், நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள், கடல் பாது­காப்பு, வெளி­நாட்­டுக் கொள்கை போன்ற பல விட­யங்­கள் தொடர்­பில் ஆராய்ந்­தி­ருந்­தோம்.

இலங்­கை­யின் அபி­வி­ருத்­திக்­கா­க­வும் பாது­காப்பு நட­வ­டிக்­கைக்­கா­க­வும் 21 மில்­லி­யன் டொலர்­களை வழங்­கி­யி­ருந்­தோம்.
போருக்­குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யில் இலங்­கை­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள் மற்­றும் நீதிப் பொறி­முறை தொடர்­பில் அமெ­ரிக்கா அதி­கம் கவ­னம் செலுத்­து­கி­றது.

இலங்­கை­யில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நல்­லி­ணக்­கம், சட்ட விதி­முறை மற்­றும் நீதித்­துறை சீர்­தி­ருத்த முயற்­சி­க­ளுக்­கி­ணை­யாக, இரு­த­ரப்பு பாது­காப்­புப் பிரிவு ஒத்­து­ழைப்­பும் தொட­ரப்­ப­ட­வுள்­ளது.

கண்­ணி­வெ­டி­களை அகற்­று­தல், கூட்டு இரா­ணுவ ஈடு­பா­டு­கள், இலங்கை அதி­கா­ரி­க­ளுக்­கான மனித உரி­மை­கள் பயிற்சி, கப்­பல்­கள் மற்­றும் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளின் வருகை ஆகி­ய­வற்­றுக்­கான ஐக்­கிய அமெ­ரிக்­கா­வின் ஆத­ரவு ஆகி­யவை உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

உல­க­ளா­விய பாது­காப்­புக்கு பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வாத குழுக்­கள் தொடர்­பான தமது கரி­ச­னையை இலங்­கை­யும், ஐக்­கிய அமெ­ரிக்­கா­வும் பகிர்ந்து கொண்­டுள்­ளன.

வட­கொ­ரி­யா­வின் ஏவு­க­ணைத் திட்­டங்­க­ளி­னால் பன்­னாட்டு அமைதி மற்­றும் பாது­காப்­புக்கு ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்­தல் குறித்­தும், வட கொரியா மீது அனைத்து ஐக்­கிய நாடு­கள் உறுப்­பி­னர்­க­ளும் அழுத்­தம் செலுத்த வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வம் குறித்­தும் ஆரா­யப்­பட்­டது என்­றார்.

Leave a comment