புதிய அரசியல் அமைப்பு நாட்டை பிளவுப்படுத்தாது – ஜனாதிபதி

Posted by - January 1, 2017

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டைத் பிளவுப்படுத்தும் ஆவணமல்லவென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் முன்னிலையில் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அஸ்கிரி மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோதும் அதில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அல்லது புத்த சாசனத்திற்கு பாதிப்பான எந்தவொரு அம்சமும் கிடையாது. அத்தகையதொரு நடவடிக்கைக்கு தனது பதவிக்காலத்தில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 42 ஆயிரத்து 158 குடும்பங்கள் மீள்குயேற்றம்

Posted by - January 1, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் நாற்பத்தி இரண்டாயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33750 பேர் வரையில் மீள்குடியேறியுள்ளனர் என மாவட்ட அரச அதிபர் ரூபதவி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதாவது துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் மூவாயிரத்து 786 குடும்பங்களைச் சேர்ந்த பதினோராயிரத்து 856 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டாயிரத்து 933 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 197 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரத்து 961

கிளிநொச்சியில் மூன்று இலட்சம் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - January 1, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மூன்று இலட்சத்து 401 வரையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணிவெடிசெயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வுகள் மேற்கொள்ளும் பொருட்டு வெடி பொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் மிக ஆபத்தான பகுதியாகவும் வெடிபொருட்கள் விதைக்கப்பட்ட பூமியாகவும் முகமாலைப்பகுதி காணப்படுகின்றது. தற்போது பதினொரு சதுர கிலோ மீற்றர் வரையான பகுதிகளில் இவ்வாறு வெடிபொருட்கள் அகற்றப்படவேண்டிய பகுதிகளாக காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் கிளாலி தொடர்க்கம்

கடனா செல்கிறார் சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - January 1, 2017

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று கனடாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். சுனாமியினாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அவர் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று கனடா செல்லவுள்ளார். இதேவேளை, அரசியல் ரீதியான சில காரணங்களுக்காகவும் தங்களை தக்கவைத்து கொள்வதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை தொடர்பில் தமிழ் மக்களுக்கு எதிரான சிந்தனைகளை சிலர் வெளிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் வைத்து வடமாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் இதனை

தேசிய அரசு பிளவுப்படாது – ஜனாதிபதி

Posted by - January 1, 2017

அரசாங்கத்துக்குள் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்ட குழுக்கள் இருக்கின்றபோதும் நல்லாட்சி அரசாங்கம் ஐந்தாண்டு காலத்திற்கு இணைந்தே செயற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆளுக்கட்சியின் சில உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்கப்பபோவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்தபோதே, ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் அங்கும் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் தமக்கிடையில் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளமுடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதுவருடத்தில் ஒரு நொடி அதிகம்

Posted by - January 1, 2017

உலக வாழ் பல்லின மக்களும் இன்று புது வருட பிறப்பை கொண்டாடுகின்றனர். புதுவருடத்தினை இலங்கை உள்ளிட்ட உலக வாழ் மக்கள் மிக கோளாகலமாக வான வேடிக்கைகளுடன் வரவேற்றனர். மலர்திருக்கும் புதிய புத்தாண்டானது ஒரு வினாடி காலப்பகுதியினை அதிகம் பெற்ற வருடமாக அமைந்துள்ளது. வருடத்தின் முதல் நாளை ஆங்கிலேயர் முறைப்படி அனைவரும் புதுவருடப்பிறப்பாக கொண்டாடுகின்றனர். புது வருட பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆலங்கள், தேவாலயங்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்களில் உள்ளிட்ட மத வாழிப்பாட்டு தளங்களில் முக்கிய

புதிய அரசமைப்பின் ஊடாக இவ்வாண்டு நிரந்தர தீர்வு கிடைக்கட்டும்

Posted by - January 1, 2017

2017ஆம் ஆண்டானது இந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய ஆண்டாக அமையுமென நம்புகின்றேன். முன்வைக்கப்படவுள்ள புதிய அரசமைப்பின் ஊடாக, எமது தேசியப் பிரச்சினைக்கு நிலையானதும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதுமான தீர்வொன்றை 2017 ஆம் ஆண்டிலே அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கூட்டுப்படைகளின் தளபதி பதவியை இல்லாதொழிப்பது குறித்து ஆலோசனை

Posted by - January 1, 2017

கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி பதவியை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பதவியை தற்போது எயர் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க வகித்து வருகின்றார். கோலித குணதிலக்கவை ஒய்வுபெற வைத்து அவரது அலுவலகத்தை மூட வேண்டுமென ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.