கிளிநொச்சியில் மூன்று இலட்சம் வெடிபொருட்கள் மீட்பு

256 0

dog-1கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மூன்று இலட்சத்து 401 வரையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணிவெடிசெயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வுகள் மேற்கொள்ளும் பொருட்டு வெடி பொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிக ஆபத்தான பகுதியாகவும் வெடிபொருட்கள் விதைக்கப்பட்ட பூமியாகவும் முகமாலைப்பகுதி காணப்படுகின்றது.

தற்போது பதினொரு சதுர கிலோ மீற்றர் வரையான பகுதிகளில் இவ்வாறு வெடிபொருட்கள் அகற்றப்படவேண்டிய பகுதிகளாக காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கிளாலி தொடர்க்கம் நாகர் கோவில் வரைக்குமான பகுதிகள் மிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக காணப்பட்டன.

இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் வெடிபொருள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மனித நேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்கள் மேற்கொண்ட மீட்புப்பணிகள் போது சுமார் மூன்று இலட்சத்து 401 வரையான வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

அதாவது சுமார் ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 270 மிதிவெடிகளும் 505 வரையான அதி சக்தி வாய்ந்த கவச எதிர்ப்பு மிகவெடிகளும் இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்து 626 வரையான மிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெடிக்கும் நிலையில் காணப்பட்ட எறிகணைகள் கைக்குண்டுகள் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் என சுமார் மூன்று இலட்சத்து 401 வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டன.