தேசிய அரசு பிளவுப்படாது – ஜனாதிபதி

235 0

maithiriஅரசாங்கத்துக்குள் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்ட குழுக்கள் இருக்கின்றபோதும் நல்லாட்சி அரசாங்கம் ஐந்தாண்டு காலத்திற்கு இணைந்தே செயற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆளுக்கட்சியின் சில உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்கப்பபோவதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்தபோதே, ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் அங்கும் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் தமக்கிடையில் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளமுடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவின் பதவிவிலகல் விடயத்தையும் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.