ஈழ அகதிகள் தொடர்பான கொள்கையை மாற்றியது இந்தோனேசியா

Posted by - January 18, 2017

ஈழ அகதிகளை முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து, இந்தோனேசியா அகதிகள் தொடர்பான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜகார்த்தா போஸ்ட் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதியால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா நோக்கி அகதிகளாக சென்ற ஈழத்தவர்கள் பலர் படகு இயங்காத நிலையில் இந்தோனேசியாவில் தரையிறங்க முயற்சித்த போதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பில் சர்வதேச அளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில்

தமிழர்கள் மீது சிங்களவர்களுக்கு தற்போது கோபமில்லை – பொன்சேகா

Posted by - January 18, 2017

தமிழ் மக்கள் மீது தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கு தற்போது கோபம் இல்லை என்று அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாடு ஒருமைப்பட்டு வாழ வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகள் தொடர்ந்தும் விடப்படமாட்டாது. அனைத்து இன மக்களுக்கு சம அந்தஸ்த்து வழங்கப்படும் வகையிலான சூழ்நிலை இலங்கையில் உருவாக்கப்படும் என்றும் அவர்

ஏழு மாகாண முதலமைச்சர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

Posted by - January 18, 2017

வடக்கு கிழக்கைத் தவிர்ந்து ஏழு மாகாணங்களின் முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் சுதந்திர கட்சியில் பிளவு ஏற்படாத வகையில் ஒன்றிணைந்து போட்டியிடுவது சம்மந்தமாக அவர்கள் மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரிய வான் படையினர் தாக்குதல் – அகதிகள் பலி

Posted by - January 18, 2017

நைஜீரிய வான் படையினரின் யுத்த விமானம் ஒன்று நைஜீரியாவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றின் மீது தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 100க்கும் அதிகமான அகதிகளும், தொண்டு பணியாளர்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. போக்கோ ஹராம் தீவிரவாதிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் கட்டளை குறித்த யுத்த விமானத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதன் விமானியால், தவறுதலாக குறித்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். முன்னரும் இவ்வாறான

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பு அத்துரலிய ரத்தனதேரர் ஆதரவளிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

Posted by - January 18, 2017

சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தனதேரர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் என்பதை ரத்தனதேரர் அறிந்துகொண்டுள்ளமை பெரிய விடயமாகும். தேரர்களைத் தாக்கும் போது அவரால் எவ்வாறு அரசாங்கத்தில் இருக்க முடியாது என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நுகேகொடை கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் – மஹிந்த அணி

Posted by - January 18, 2017

நுகேகொடையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. குறித்த கூட்டத்தை ஏற்பாடு செய்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய தேவை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவுக்கு இல்லை. மக்களை வீதிக்கு இறக்கி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என

பிரித்தானியர்களிடம் சுதந்திரத்தைப் பெற போராடியதை இன்று பலர் மறந்து விட்டனர்

Posted by - January 18, 2017

பிரித்தானியர்களிடம் சுதந்திரத்தைப் பெறுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து போராடியமை இன்று பெரும்பாலானோருக்கு மறந்துபோயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முஸ்லிம் கலாசார திணைக்களத்தால, முஸ்லிம் கலாசார கட்டிடத் தொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளால் தவறான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை தோற்றுவிக்க முயற்சிக்கப்படுகின்றது. சமாதானத்தை சீர்குலைக்க அவர்கள் அரசியல் வைராக்கியத்துடன் செயற்படுகின்றன. இவ்வாறான அடிப்படைவாதிகளுக்கு இடமளிக்காமல் நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை

புதிய எல்லை வகுப்பு வர்த்தமானி அறிவிப்பு – 31ஆம் திகதி

Posted by - January 18, 2017

புதிய பிரதேச எல்லை வகுப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இந்த மாதம் 31ஆம் திகதி வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஃபைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார். புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கை நேற்றையதினம் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கூறியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பு – தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை

Posted by - January 18, 2017

இலங்கையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களைப் போல இல்லாமல், தற்போது நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏற்ற அரசியல் பின்னிலைகள் உருவாகி இருக்கின்றன. நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. அதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜே விபியும் அரசாங்கத்தின் புதிய அரசியல்

இலங்கைக்கு முன்னுரிமை – ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர்

Posted by - January 18, 2017

இலங்கைக்கு ஆதரவு வழங்க தமது நிறுவனம் முன்னுரிமை வழங்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜீன் லீ ஜீவான் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பெருந்தெருக்கள், தொடரூந்து பாதைகள், துறைமுகங்கள் மற்றும் நகர அபிவிருத்தி ஆகிய பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காக உதவி கடனுதவிகளை வழற்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் இதன்போது கூறியுள்ளார். இதற்கிடையில் பூகோள பொருளதார முன்னேற்றத்துக்கு, சுதந்திர