தமிழ் மக்கள் மீது தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கு தற்போது கோபம் இல்லை என்று அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாடு ஒருமைப்பட்டு வாழ வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகள் தொடர்ந்தும் விடப்படமாட்டாது.
அனைத்து இன மக்களுக்கு சம அந்தஸ்த்து வழங்கப்படும் வகையிலான சூழ்நிலை இலங்கையில் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.