நுகேகொடை கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் – மஹிந்த அணி

238 0

Dinesh_Udaya_wimal_Wasu-380-seithyநுகேகொடையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

குறித்த கூட்டத்தை ஏற்பாடு செய்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய தேவை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவுக்கு இல்லை.

மக்களை வீதிக்கு இறக்கி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.