புதிய பிரதேச எல்லை வகுப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இந்த மாதம் 31ஆம் திகதி வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஃபைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கை நேற்றையதினம் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கூறியுள்ளார்.