பிரித்தானியர்களிடம் சுதந்திரத்தைப் பெற போராடியதை இன்று பலர் மறந்து விட்டனர்

254 0

150715124318_maithree_photo_624x351_afp_nocreditபிரித்தானியர்களிடம் சுதந்திரத்தைப் பெறுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து போராடியமை இன்று பெரும்பாலானோருக்கு மறந்துபோயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் கலாசார திணைக்களத்தால, முஸ்லிம் கலாசார கட்டிடத் தொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளால் தவறான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை தோற்றுவிக்க முயற்சிக்கப்படுகின்றது.

சமாதானத்தை சீர்குலைக்க அவர்கள் அரசியல் வைராக்கியத்துடன் செயற்படுகின்றன.

இவ்வாறான அடிப்படைவாதிகளுக்கு இடமளிக்காமல் நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பாதுகாக்க அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.