சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தனதேரர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் என்பதை ரத்தனதேரர் அறிந்துகொண்டுள்ளமை பெரிய விடயமாகும்.
தேரர்களைத் தாக்கும் போது அவரால் எவ்வாறு அரசாங்கத்தில் இருக்க முடியாது என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.