ஏழு மாகாண முதலமைச்சர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

252 0

unnamed-5-800x534வடக்கு கிழக்கைத் தவிர்ந்து ஏழு மாகாணங்களின் முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் சுதந்திர கட்சியில் பிளவு ஏற்படாத வகையில் ஒன்றிணைந்து போட்டியிடுவது சம்மந்தமாக அவர்கள் மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.