கிழக்கு பல்கலையின் கற்றல் நடவடிக்கை 31இல் ஆரம்பம்

Posted by - January 26, 2017

கிழக்கு பல்கலைகழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக பீட இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகள் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மாணவர்களினால் கடந்த 18ஆம் திகதி முதல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக தமது உடைமைகளுடன் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தில் தங்கியிருந்தனர். இதனால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்

உணவு இன்றி உறவுகளுக்காக போராடும் மக்களின் துன்பம், கொலை செய்தவர்களுக்கு புரியாது-சிவஞானம் சிறீதரன்

Posted by - January 26, 2017

இராணுவத்தினர் பிஸ்கட் கொடுத்து பாலச்சந்திரனை கொலை செய்துள்ளனர். இதன் புகைப்படங்களைக் கூட இராணுவத்திரே எடுத்துள்ளனர். அந்தப்புகைப்படங்களும் செய்திகளும் பத்திரிகைகளில் கூட வெளிவந்தன. அதேபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இன்று வரை நீதி கிடைக்காது உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறினார். பாராளுமன்றில் இன்று  இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து அவர், கடந்த நான்கு நாட்களாக வவுனியாவில் உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வருகின்றது. ஒரு அரசியல்வாதி சாதாரணமாக வெளி

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம்

Posted by - January 26, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பிரசாரங்களுக்காக பஸ்களை பயன்படுத்தி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்குழு ஆகிய தரப்புக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு வணிக மேல்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.வழக்கு தொடர்பிலான பிரதிவாதங்களை முன்வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி

ஆயுள்வேத திணைக்களம் அமைக்க நடவடிக்கை-ராஜித சேனாரத்ன

Posted by - January 26, 2017

ஆயுள்வேத வைத்தியர்களுடன் கூடிய ஆயுள்வேத திணைக்களம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஆயுள்வேத வைத்தியர்களை நிர்வாகத்தில் இணைத்துக் கொள்வது இதன் நோக்கமாகும் என்று மருத்துவ திருத்தச் சட்டமூல விவாத்தில் இன்று பாராளுமன்றத்தில் கலந்துகொண்டபோது அமைச்சர் இதனை தெரிவித்தார். சுகாதார திணைக்களத்தைப் போன்று ஆயுள்வேத திணைக்களமும் முறையாக முன்னெடுக்கப்படவிருக்கிறது. இலங்கை மருத்துவப் பேரவையை போன்று ஆயுள்வேத மருத்துவப் பேரவையும் அமைக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் விளக்கமறியல்

Posted by - January 26, 2017

பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க தடை விடுத்து அவருக்கு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

Posted by - January 26, 2017

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியதில், குறித்த வீடு சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஓடை லேன் என்னும் முகவரியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நேற்று இரவு நுழைந்த இனந்த தெரியாத நபர்கள், உரப்பை ஒன்றினுள் வெற்றுப்போத்தல்களைக் கொண்டு வந்ததுடன், குறித்த வெற்றுப்போத்தல்கள் மூலம் வீட்டிற்குச் சேதம் விளைவித்துள்ளனர். சம்பவத்தின்போது 3 பேர் முகத்தைக் கறுப்புத் துணியால் கட்டியபடி வீட்டிற்குள் நுழைந்து ஜன்னல்களை உடைத்துள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, திருட்டில் ஈடுபடும் நோக்கத்துடன் குறித்த மூவரும்

வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் தீ விபத்து

Posted by - January 26, 2017

வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போனோர் உறவுகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

Posted by - January 26, 2017

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளது- கயந்த கருணாதிலக

Posted by - January 26, 2017

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக, சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுப்பதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறினார். நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருந்த நெல்லில் 90 ஆயிரத்து 958 மெட்ரிக் தொன் நெல், அரிசியாக்கப்பட்டு சந்தைப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்தில் ஆலை

டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளது- திஸ்ஸ விதாரண

Posted by - January 26, 2017

டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமா கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். புஞ்சிபொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த திஸ்ஸ விதாரண, மழை நீரை சேமிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்று கூறினார். நாட்டில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும், கடந்த ஆண்டில் டெங்கு நுளம்பின் தாக்கம் ஓரளவு கூடி, குறைந்து காணப்பட்டாலும், இவ்வருடம் ஆரம்பம்