யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

233 0

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியதில், குறித்த வீடு சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஓடை லேன் என்னும் முகவரியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நேற்று இரவு நுழைந்த இனந்த தெரியாத நபர்கள், உரப்பை ஒன்றினுள் வெற்றுப்போத்தல்களைக் கொண்டு வந்ததுடன், குறித்த வெற்றுப்போத்தல்கள் மூலம் வீட்டிற்குச் சேதம் விளைவித்துள்ளனர்.

சம்பவத்தின்போது 3 பேர் முகத்தைக் கறுப்புத் துணியால் கட்டியபடி வீட்டிற்குள் நுழைந்து ஜன்னல்களை உடைத்துள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருட்டில் ஈடுபடும் நோக்கத்துடன் குறித்த மூவரும் தமது வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் எனவும் வீட்டு உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது