காணாமல்போனோர் உறவுகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

241 0

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வவுனியாவுக்குப் பயணம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன வழங்கிய வாக்குறுதிக்கமைய போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் உறுதிமொழிக்கமைய,  எதிர்வரும் 9 ஆம் நாள் அலரி மாளிகையில் பிரதமர், இராஜாங்க அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேரில் கலந்துரையாடவுள்ளனர்.