மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 27, 2017

மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக படுவான்கரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் பிரதான போக்குவரத்து பாதைகளாகவுள்ள மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதி, ஆயித்தியமலை-கரடியனாறு பிரதான வீதி, கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதி ஆகியவற்றினால் வெள்ள நீர் பாய்ந்துசெல்வதனால் எழுவான் கரைக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பகுதியில் பல பகுதிகளில் வீதிகளால் வெள்ளம் பாய்ந்துசெல்வதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலையுள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்தார். போரதீவுப்பற்று பிரதேச

ஹற்றன்-குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி(காணொளி)

Posted by - January 27, 2017

  நுவரெலியாவில், ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன்-குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன்-குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹற்றன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்றும் கொட்டகலை பகுதியிலிருந்து ஹற்றனை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் ஹற்றன்-குடாஓயா பிரதான வீதியில் நேர்க்கு நேர்

ஊடகங்கள் கிடைத்துள்ள சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்

Posted by - January 27, 2017

சவாலான பல விடயங்கள் முன்னால் இருந்தாலும் தற்போது என்றுமில்லாத ஊடக சுதந்திரம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களின் பின்னர் மகிந்தவின் மேடையில் துரோகி கருணா!

Posted by - January 27, 2017

உலகத்திலேயே அழிக்க முடியாத சக்தி மிக்க அமைப்பான விடுதலைப்புலிகளின் அமைப்பை அழித்தவர் மகிந்த ராஜபக்சவே என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் இன்று நடைபவனி(காணொளி)

Posted by - January 27, 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் இன்று நடைபவனி ஒன்றை மேற்கொண்டனர். மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள், இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையின் தரத்தை பாதுகாக்க அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் நடைபயணத்தை மேற்கொண்டனர்.யாழ்ப்பான மருத்துவ பீடத்தில் இருந்து நடைபவனியை ஆரம்பித்தனர். யாழ்ப்பான மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி பலாலி வீதி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது. .

மாணவர்களின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் தொடர்ந்தும் விளக்கமறியல் (காணொளி)

Posted by - January 27, 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளும், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி எஸ்.சதீஸ்கரன், சந்தேக நபர்களை மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல் ஏதாவது விடுக்கப்பட்டால், அதுகுறித்து

நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்திற்கு மாவை சேனாதிராசா உடந்தை!

Posted by - January 27, 2017

சர்ச்சைக்குரிய நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களிற்கு வீடுகளை ஒதுக்கி வழங்க மாவை சேனாதிராசா சம்மதித்திருந்தமை அம்பலமாகியுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளனர்.

அனைத்து திருடர்களும் நாடாளுமன்றில்

Posted by - January 27, 2017

நாட்டிலுள்ள அனைத்து திருடர்களும் அரசாங்கத்திலேயே இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.