அனைத்து திருடர்களும் நாடாளுமன்றில்

215 0

நாட்டிலுள்ள அனைத்து திருடர்களும் அரசாங்கத்திலேயே இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் பிணை முறி திருடர்கள், நிலக்கரி ஒப்பந்த திருடர்கள் மற்றும் பல துறைகளிலும் ஈடுபட்டுள்ள திருடர்கள் அரசாங்கத்தில் இருப்பதுடன் பாராளுமன்றுக்குள் அமர்ந்திருக்கின்றார்கள் எனவும் கூறியுள்ளார்.

இவற்றை மக்கள் தொடர்ந்து பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். யாருடனேனும் ஒப்பந்தம் செய்து நிச்சயம் அரசாங்கத்தை வீழ்த்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வதன் மூலம் எமது போராட்டங்களை நிறுத்த முடியாது. விமல் வீரவங்சவின் கைதும் இப்படியான ஒன்றே.

இவ்வாறு கைதுகள் மூலம் அச்சுறுத்தினால் எம்மை தடுத்து நிறுத்த முடியாது. அரசாங்கத்திற்கு எதிரான எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஸம்மில் தெரிவித்துள்ளார்.