சவாலான பல விடயங்கள் முன்னால் இருந்தாலும் தற்போது என்றுமில்லாத ஊடக சுதந்திரம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஊடகங்கள் என்றுமில்லாத வகையிலான சுதந்திரத்தை தற்போது அனுபவித்து வருவதாகவும் அவை அதனை பொறுப்புடன் பயன்படுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் அரசாங்கம் எடுக்கும் சரியான முடிவுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றோம்
ஜனாதிபதியும் தேவையான அனைத்து நேரங்களிலும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானங்களை எடுப்பதாகவும் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.