பசிலின் செயலாளருக்கு அழைப்பாணை!

239 0

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் செயலாளரை, நீதிமன்றில்முன்னிலையாகுமாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா நீதவான் நீதிமன்றமே இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. அரச நிதிகளை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே நீதிமன்றில்முன்னிலையாகுமாறு பசில் ராஜபக்ஸவின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா பகுதியில் சட்டவிரோதமான முறையில் அலுவலகம் ஒன்றை நடத்தி வந்ததாகபசிலின் செயலாளருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கிணங்க,எதிர் வரும் மே மாதம் 05ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறுஉத்தரவிடப்பட்டுள்ளது.