யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி(காணொளி)

Posted by - January 27, 2017

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது. நாளையும், நாளை மறுதினமும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தொடர்ந்து நடைபெறவுள்ளது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நாடா வெட்டித்திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 3 பிரிவுகளாக 300 காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றைய கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், வர்த்தகக் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ,யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், யாழ்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரிடம் கையளித்தனர்(காணொளி)

Posted by - January 27, 2017

மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள், இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையின் தரத்தை பாதுகாக்க அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் நடைபயணத்தை இன்று மேற்கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இருந்து, மருத்துவபீட மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபவனி, பலாலி வீதி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. நடைபவனி நிறைவில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர்

மட்டக்களப்பில்  முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா(காணொளி)

Posted by - January 27, 2017

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா, இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அதிபர் வெஸ்லியோ வாஸ்  தலைமையில் நடைபெற்ற கால்கோள் விழா நிகழ்வில், பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ.சுகுமாரன் கலந்து கொண்டார். ஆரம்ப நிகழ்வாக அதிதிகள், மாணவர்களால் வரவேற்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் மாணவர்களின் வரவேற்பு நிகழ்வுகளும் நடைபெற்றன. தொடர்ந்து கல்லூரியின் இரண்டாம் தர மாணவர்கள், முதலாம் தரத்திற்கு

சிறிலங்காவில் மங்கி வரும் நீதிக்கான நம்பிக்கை!

Posted by - January 27, 2017

சிறிலங்காவில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் பல ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தற்போது ஏமாற்றத்தை உண்டுபண்ணுகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் கூறினார்கள்.

மட்டக்களப்பு ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தினால் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 27, 2017

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு, மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தினால் இன்று தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிலவுகின்ற தளபாடங்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில், வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த பாடசாலைக்குத் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியரும், மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய இணைச்செயலாளருமான எஸ்.தயாளனின் ஏற்பாட்டில், ஆலய பரிபாலன சபையினால், விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் ஒரு வகுப்பறைக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கொத்துக்குளத்து

ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் வானொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது(காணொளி)

Posted by - January 27, 2017

நுவரெலியாவில், ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் வானொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது. நுவரெலியா வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை-குயில்வத்தை பகுதியில் வான் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று மதியம் இடம்பெற்றுள்ள குறித்த விபத்தில், நுவரெலியா பகுதியிலிருந்து ஓமான் நாட்டு பிரஜைகளை- காலியை நோக்கி ஏற்றிச்சென்ற குறித்த வான், குயில்வத்தை பகுதியில் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதால், குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மலையகத்தில்

பல்கலைக்கழ மாணவர்களின் படுகொலை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Posted by - January 27, 2017

கடந்த ஆண்டு குளப்பிட்டிச் சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் அனைவரும் வெளிநாடு செல்லலாம்!

Posted by - January 27, 2017

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளும் வெளிநாடு செல்லலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் திறக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 27, 2017

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று லயன்ஸ் கழகத்தின் உதவியுடன், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் எஸ்.சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர் லயன் அசேல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்தில்கொண்டு, லயன்ஸ் கழகத்தினால் வித்தியாலய நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, எதுவித

ராஜபக்சவே நாட்டை சீரழித்து வருவதாக கூறிவருகின்றார்கள் ஆனால் உண்மையில் ரணிலே நாட்டை கெடுத்துக் கொண்டு வருகின்றார்

Posted by - January 27, 2017

கூடிய விரைவில் நல்லாட்சி கவிழ்க்கப்படுவது உறுதி, மகிந்த வீட்டு மலசல கூடத்தினை கழுவப்போகின்றார் ஓர் அரசாங்க அமைச்சர் என பெங்கமுவ நாலக தேரர் தெரிவித்தார்.