மட்டக்களப்பில்  முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா(காணொளி)

390 0

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா, இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அதிபர் வெஸ்லியோ வாஸ்  தலைமையில் நடைபெற்ற கால்கோள் விழா நிகழ்வில், பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ.சுகுமாரன் கலந்து கொண்டார்.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள், மாணவர்களால் வரவேற்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் மாணவர்களின் வரவேற்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.

தொடர்ந்து கல்லூரியின் இரண்டாம் தர மாணவர்கள், முதலாம் தரத்திற்கு வருகை தந்த மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றனர்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், கல்லூரி அபிவிருத்தி குழு  உறுப்பினர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.