யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரிடம் கையளித்தனர்(காணொளி)

377 0

மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள், இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையின் தரத்தை பாதுகாக்க அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் நடைபயணத்தை இன்று மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இருந்து, மருத்துவபீட மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபவனி, பலாலி வீதி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
நடைபவனி நிறைவில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ரெயினோல்ட் கூரே ஆகியோரிடம் மருத்துவத்துறை மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைக் கையளித்தனர்.