மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் திறக்கப்பட்டது(காணொளி)

249 0

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று லயன்ஸ் கழகத்தின் உதவியுடன், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எஸ்.சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர் லயன் அசேல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்தில்கொண்டு, லயன்ஸ் கழகத்தினால் வித்தியாலய நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதுவித வசதிகளும் இன்றி இயங்கிவந்த குறித்த நூலகத்திற்கு தளபாடங்கள் உட்பட பெருமளவான நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

லயன்ஸ் மாவட்ட தலைவர் ரி.ஆதித்தியனின் முயற்சி காரணமாக இந்த நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டு, தரமுயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் இரண்டாவது ஆளுனர் லயன் நிமால் ரணவக்க, மேலதிக பொருளாளர் லயன் பொறியியலாளர் என்.பி.ரஞ்சன், அக்கரைப்பற்று லயன்ஸ் கழகத்தின் தலைவர் ஏ.எம்.ஹலீம், பிராந்திய செயலாளர் லயன் ஜி.முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.