எதிர்வரும் காலங்களில் கடற்தொழில்துறை பல பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் – கடற்றொழில்துறை அமைச்சர் எச்சரிக்கை

Posted by - January 29, 2017

அருகிவரும் மீனினங்களை பெருக்கமடையச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாமை காரணமாக எதிர்வரும் காலங்களில் கடற்தொழில் துறை பல பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடற்தொழில் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். கடலில் உள்ள மீன்களை பிடிப்பதற்கு உலகில் உள்ள சகல தொழிநுட்ப முறையிலான உபகரணங்களும் பயன்படுத்தப் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது-கூட்டு எதிர்க்கட்சி

Posted by - January 29, 2017

கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள தனியார் காணி ஒன்றை வரிச்சலுகையின் கீழ் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொம்பனித் தெருவில் உள்ள 8 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார். அரசாங்கம் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டு

எவர் முயற்சித்தாலும் அரசாங்கத்தை மாற்ற முடியாது-மைத்திரிபால சிறிசேன

Posted by - January 29, 2017

நனவாகாத கனவுகளுடன் அரசாங்கத்தை மாற்ற எவர் முயற்சித்தாலும் அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வலுவான, தேசப்பற்றுள்ள குணநலன்கள் மற்றும் ஞானமிக்க அரசியலுடன் இணக்க அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் எதிர்கால பயணம் 2020 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். மொனராகலை கும்புக்கன் ஓயா நீர்தேக்கத்திட்டத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். ஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் கொள்கைகளுக்கு கிரீடம்

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மீண்டும் ஆரம்பித்துள்ளது-றூபவதி கேதீஸ்வரன்

Posted by - January 29, 2017

முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவரினால் எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவரின் ஆலோசனைக்கு ஏற்ப இவ்விடயத்தை கடற்படையினருக்கு அறிவித்துள்ளேன். முல்லைத்தீவுக் கடலிலே இந்திய றோலர்களின் அத்துமீறிய

கடந்த ஆட்சியின்போது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் இன்று பேசுகின்றனார்கள்-கபீர் ஹாஸிம்

Posted by - January 29, 2017

கடந்த ஆட்சியின்போது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் இன்று பேசுகின்றனார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார். ”நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ரணிலுடன் இணைவோம்” என்ற தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அமைச்சர் கபீர் ஹாஸிம் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், இன்று பொது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், அன்று அமைச்சர்களாக இருந்தனர். நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து அப்போது பேச அவர்களுக்கு தேவை இருக்கவில்லை. இன்றுதான

ஊழல் செய்கின்றவர்கள் எமது கட்சியிலே இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் -ரஞ்சன் ராமநாயக்க

Posted by - January 29, 2017

எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, பிள்ளைகளும் இல்லை யாராக இருந்தாலும் நேரடியாக மோதுகின்றவனே நான் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவனே நான் யாருக்கும் அச்சம் இல்லை எவருக்கும் பணிந்தவனும் இல்லை. ஊழல் செய்கின்றவர்கள் எமது கட்சியிலே இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என

ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

Posted by - January 29, 2017

கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுக்கான  பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று  இவர்கள் கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும் -ரணில்

Posted by - January 29, 2017

பணிப்பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடாத்தி  நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். நாம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ள நாட்டையே கையேற்றோம். 2015 இல் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க தீர்மானித்தோம். பொருளாதாரத்தை சரிசெய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி வரும்

அரசாங்கத்திற்குள் “பனிப்போர்” நிலவவில்லை-சந்திம வீரக்கொடி

Posted by - January 29, 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் முன்வைக்கும் சில யோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்தாலும் அரசாங்கத்திற்குள் “பனிப்போர்” நிலவவில்லை என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கைக்குள் மக்களுக்கு ஏதேனுமொரு செயற்பாடு நடந்தால், அதனை நிறுத்த வேண்டிய பொறுப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இருக்கின்றது. எந்த வகையிலாவது இலங்கையில் சர்வாதிகாரமிக்க தலைவர் ஒருவர் இருந்திருப்பாரேயானால் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணைகள் நடக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பெற, ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம்,

ஜனாதிபதி சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் -அருட்திரு சக்திவேல்

Posted by - January 29, 2017

எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அரசியல் தீர்மானத்தை எடுத்து, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்திரு சக்திவேல் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திரம் தினம் ஒரு தினம் என்ற ரீதியிலும், ஒரு தரப்பினர் அனுஷ்டிக்கும் வகையிலும் மட்டுப்பட்டிருந்தது. அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனவர்கள், போரில் பாதிக்கப்பட்டவர்கள்