கடந்த ஆட்சியின்போது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் இன்று பேசுகின்றனார்கள்-கபீர் ஹாஸிம்

240 0

கடந்த ஆட்சியின்போது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் இன்று பேசுகின்றனார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார்.

”நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ரணிலுடன் இணைவோம்” என்ற தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அமைச்சர் கபீர் ஹாஸிம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

இன்று பொது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், அன்று அமைச்சர்களாக இருந்தனர்.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து அப்போது பேச அவர்களுக்கு தேவை இருக்கவில்லை. இன்றுதான பேசுகின்றனர்.

இந்த பொருளாதார பிரச்சினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் உருவாக்கப்பட்டதா என நான் உங்களிடம் கேட்கின்றேன் என அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார்.