ஜனாதிபதி சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் -அருட்திரு சக்திவேல்

250 0

எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அரசியல் தீர்மானத்தை எடுத்து, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்திரு சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சுதந்திரம் தினம் ஒரு தினம் என்ற ரீதியிலும், ஒரு தரப்பினர் அனுஷ்டிக்கும் வகையிலும் மட்டுப்பட்டிருந்தது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனவர்கள், போரில் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் தீர்வை வழங்குவதன் மூலம் உண்மையான சுதந்திரத்தை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

சுதந்திரதினத்திற்கு முன்னர் இது சம்பந்தமாக இறுதி அறிவிப்பை வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அருட்திரு சக்திவேல் குறிப்பிட்டுள்ளார்.