அரசியல் பேசலாம் வாருங்கள் – 12 பிப்ரவரி

Posted by - February 10, 2017

சல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கெடுத்த தோழமைகள், நண்பர்கள், பொதுமக்கள் என அனைவரும் சந்தித்துப் பேசவும், போராட்டத்தின் அனுபவத்தை பேசவும், அரச வன்முறையின் வலியை பகிரவும் ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். பங்கெடுத்து போராட்டத்தினை வலிமைப்படுத்திய தோழர்களுக்கு அன்பையும், நட்பையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும், வாழ்த்துகளையும் மற்றும் தொடர்ந்து களத்தில் நிற்பதற்கான உறுதியையும் பகிர அனைவரும் பங்கெடுக்க வாருங்கள். போராட்டத்தின் வீரியத்தையும், உற்சாகத்தையும் வீழ்த்திவிட முனையும் சக்திகளை வெல்வதற்காய் ஒன்று கூடுவோம். இன்று நடைபெற்றுவரும் அரசியல் நிகழ்வுகள், மற்றும் கடந்த வாரங்களில்

மடுப் பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுத்து மூலம் கோரிக்கை

Posted by - February 10, 2017

மன்னார் மடுபிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தமது நிலங்களுக்கான நில அளவை வரைபடங்களை வழங்குமாறு கோரி 71 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மடுப் பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் மடுப்பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் 1965, 1996, 1970 மற்றும் 1971ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் உணவு விவசாயத்திட்டத்தின் கீழ் விவசாயச்

மாணவனை தாக்கிய அதிபரை கைது செய்ய விசாரணை

Posted by - February 10, 2017

மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், குறித்த அதிபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த அதிபர் கடந்த 8ஆம் திகதி மாணவர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மெதிரிகிரிய மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான மாணவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமது சகோதரனை பாடசாலையில் அனுமதித்ததன் பின்னர், திரும்பிச் செல்லும் வழியில்

பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறைக்கப்பட்டால் எதிர்ப்பேன் – மனோ கணேசன்

Posted by - February 10, 2017

புதிய அரசியல் அமைப்பின் மூலம், பௌத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமை குறைக்கப்படும் பட்சத்தில், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பெல்லன்வெல விமலரட்ன தேரருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நல்லிணக்கத்திற்கான நிறுவனம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

மத்திய மாகாண முதலமைச்சர் எச்சரிக்கை

Posted by - February 10, 2017

மாகாண சபைக்கான அதிகாரங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில், அதற்கு தமது எதிர்ப்பபை வெளியிடுவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். கண்டியில் இன்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனை தெரிவித்தார். மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவது தொடர்பிலான தகவல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே, முதலமைச்சர் இதனை தெரிவித்தார். மாகாண சபைக்கான அதிகாரங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு எதிராக நேற்றைய

பாலி தீவில் நிலசரிவு – இரண்டு குழந்தைகள் உட்பட பன்னிரண்டு பேர் உயிரிழப்பு

Posted by - February 10, 2017

இந்தோனேஷியாவின் பிரபலமான பாலி தீவில் இடம்பெற்ற நிலசரிவு காரணமாக இரண்டு குழந்தைகள் உட்பட பன்னிரண்டு பேர் உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் பல கிராமங்களில் நிலசரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழமைக்கு மாறாக ஏற்பட்ட மழையினை அடுத்து மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மண் மென்மையானதன் காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டதாக இந்தோனேஷிய தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் புதையுண்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில், மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் இடிபாடுகளை அகற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Posted by - February 10, 2017

ஆட்சி அமைப்பது தொடர்பான ஆளுநரின் அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைள் தமிழக அரசியல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள மதுசூதனனை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து சசிகலா பதவி நீக்கம் செய்தார். அத்துடன், கட்சியின் புதிய அவைத் தலைவராக செங்கோட்டையனை சசிகலா நியமித்துள்ளார். கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கன்னியத்திற்கு மாசு ஏற்படும் வகையில்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை ஜனாதிபதியை சந்திக்கின்றது.

Posted by - February 10, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நாளை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமையவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த குறிப்பிட்டார். மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான செயல்பாடுகள் மூலம் நாட்டின் மருத்துவ துறையில்

கல்விக்காக நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை – ஜனாதிபதி

Posted by - February 10, 2017

கல்விக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். கடந்த பாதீட்டின் போது பெருமளவான நிதி கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியானது அதிக அளவில் பயன்படுத்தப்படாத நிலையில், அந்த நிதியை வேறு துறைகளுக்கு பயன்படுத்துவதற்கான அனுமதியினை மாகாண சபைகள் கோரியிருந்தன. எனினும் பாடசாலைகளுக்கு செல்கின்றபோது பாடசாலைகளில் சுகாதார அடிப்படையிலான வசதிகள் இல்லை என நிர்வாகத்தரப்பினர்

துறைமுக நகர் திட்டம் – கடற்றொழிலுக்கு பாதிப்பில்லை

Posted by - February 10, 2017

துறைமுக நகர திட்டத்தின் காரணமாக கடற்றொழில் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுக நகர திட்டத்தினால் மேல் மற்றும் தென் கடற் பிரதேசங்களில் கடற்தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வுகளின் அடிப்படையில் துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தினால் கடற்தொழில் செயற்பாடுகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுக நகரத்திற்கு மணல் பெற்றுக்கொள்ளும் பணிகள்