கௌரவமான வடமாகாண சபையை தமது வங்குரோத்து அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர் – சி.சிவமோகன்

Posted by - January 15, 2017

குறிப்பிட்ட ஒரு சில வன்னிபிரதேச வடமாகாண சபை உறுப்பினர்கள் ஊடக மையமாக கௌரவ வடமாகாண சபையை பயன்படுத்த முயல்கின்றனர். அர்த்தங்கள் அற்ற பொருத்தமற்ற கருத்துக்களை வெளியில் கொண்டு வந்து ஊடகத்தில் இடம் பிடிக்க முயல்கின்றனர். இதன் மூலம் தமது வங்குரோத்து அரசியலை நடாத்த முன் நிற்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். அண்மையில் காந்தி சிலை முல்லை நகரில் அமைக்கப்பட்ட போது காந்தி என்ன செய்தார் முல்லைத்தீவுக்கு என ஒரு

மைத்திரி குறித்து நாங்களே முடிவெடுப்போம் – ஐக்கிய தேசிய கட்சி

Posted by - January 15, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிப்பது ஐக்கிய தேசிய கட்சியே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல்வள ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அதனை தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரே மைத்திரிபால சிறிசேனவை தோல்வியடைய செய்ய நடவடிக்கை மேற்கொண்டவர்கள். தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். இப்போது 2020ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க வேண்டும் என கூறுகின்றனர். மைத்திரிபால சிறிசேனவை

நிதியமைச்சருக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் முரண்பாடு

Posted by - January 15, 2017

தெரியாத விடயங்கள் குறித்த கதைக்க வேண்டாம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார். மூன்று லட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு தங்குமிட வீஸா வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்துள்ள அறிவிப்புக்கு, நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். முன்று லட்சம் அமெரிக்க டொலர் என்ற குறைந்தளவான முதலீட்டுக்கு எவ்வாறு தங்குமிட வீஸா வழங்குவது என்றும் அவர்

அமெரிக்காவுடனான உறவு முன்னேற்ற பாதையில் – இலங்கை

Posted by - January 15, 2017

அமெரிக்காவுடனான உறவு முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. வோசிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இலங்கையின் தூதுவர் பிரசாத் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது பதவியாண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பொறுப்பை ஏற்றப்பின்னர் இலங்கை, சர்வதேச நாடுகள் மற்றும் அமரிக்காவுடன் சிறந்த நல்லுறவை பேணி வருவதாக காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் போராட்டத்தை ராஜபக்ஸர்கள் பலமிழக்கச் செய்கின்றனர் –ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - January 15, 2017

ஹம்பாந்தோட்டை மக்களின் போராட்டத்தை பலமிழக்க செய்ய ராஜபக்ஸர்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை மக்கள் தமது இடத்தை பாதுகாக்க மேற்கொண்ட போராட்டத்தை ராஜபக்ஸர்கள் தமது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர். இதனை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் நலிந்த ஜயதிஸ்ச குறிப்பிட்டார்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரம் தண்டனை – டளஸ் குற்றச்சாட்டு

Posted by - January 15, 2017

அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரம் தண்டனை வழங்குவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோடையில் இடம்பெற்ற குழப்பநிலையின் போது கைது செய்யப்பட்டு, தங்கல்ல சிறைச்சாலையில் சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களை நேற்று சந்தித்த அவர், ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார். இது நல்லாட்சி அராசாங்கம் இல்லை. கொடுங்கோள் ஆட்சியே தற்போது நடைபெறுகின்றது. தற்போதைய ஆட்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் மாத்திரமே தண்டிக்கப்படுவதாகவும் டளஸ் அழகபெரும குறிப்பிட்டார்.

வரட்சியை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Posted by - January 15, 2017

நிலவும் வரட்சியான காலநிலை தொடர்பில் குறித்த விடயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சுர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை கூடி ஆராயவுள்ளனர். மின்சக்தி மற்றும் சக்தி வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். எந்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கவும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார். இதனிடையே, நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சாரம், நீர் மாத்திரம் அன்றி உணவு பொருட்களையும்

இலங்கைக்கு கிடைக்கும் கௌரவத்தை சீர்குலைக்க முயற்சி – ஜனாதிபதி

Posted by - January 15, 2017

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நற்பெயர் மற்றும் கௌரவத்தை தடுக்க சிலர் கடுமையான முயற்சிகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நாட்டை சமஸ்டி முறைக்கு கொண்டுச் செல்லவோ, பிளவுப்படுத்தவோ அல்ல. மீண்டும் யுத்தம் ஒன்று உருவாக்குவதையோ தவிர்க்கவும் தேசிய ஒன்றுமையை வலுப்படுத்தவுமே அரசாங்கம் முனைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கக்கூடாது

Posted by - January 15, 2017

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில், சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்குவது குறித்து

புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படும்

Posted by - January 15, 2017

இலங்கையில் புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.