மக்களின் போராட்டத்தை ராஜபக்ஸர்கள் பலமிழக்கச் செய்கின்றனர் –ஜே.வி.பி குற்றச்சாட்டு

243 0

jvp-sri-lankaஹம்பாந்தோட்டை மக்களின் போராட்டத்தை பலமிழக்க செய்ய ராஜபக்ஸர்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை மக்கள் தமது இடத்தை பாதுகாக்க மேற்கொண்ட போராட்டத்தை ராஜபக்ஸர்கள் தமது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

இதனை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் நலிந்த ஜயதிஸ்ச குறிப்பிட்டார்.