தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரம் தண்டனை – டளஸ் குற்றச்சாட்டு

229 0

Dullas-Alahapperuma1-720x480அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரம் தண்டனை வழங்குவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோடையில் இடம்பெற்ற குழப்பநிலையின் போது கைது செய்யப்பட்டு, தங்கல்ல சிறைச்சாலையில் சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களை நேற்று சந்தித்த அவர், ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார்.

இது நல்லாட்சி அராசாங்கம் இல்லை. கொடுங்கோள் ஆட்சியே தற்போது நடைபெறுகின்றது.

தற்போதைய ஆட்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் மாத்திரமே தண்டிக்கப்படுவதாகவும் டளஸ் அழகபெரும குறிப்பிட்டார்.