ஐ.நா.வில் குரல் கொடுப்பேன்! அனந்தி சசிதரன்

Posted by - January 21, 2017

நாட்டில் ஆட்சிமாறினாலும் காட்சிகள் மாறவில்லை. நல்லாட்சி அரசாங்கம்விரும்பினாலும் சிங்கள கடும்போக்காளர்கள் தமிழர்களுக்கானதீர்வைத்தர விட மாட்டார்கள். எனவே நல்லாட்சி அரசாங்கம் எமக்கானதீர்வைத் தரப் போவதில்லை.

ஊழல் வழக்குகளை விசாரிக்க இரண்டு மேல் நீதிமன்றங்கள்-சரத் அமுனுகம

Posted by - January 21, 2017

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடி, அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய இரண்டு மேல் நீதிமன்றங்களை ஒதுக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான வழக்குகளை துரிதமாக முடித்து தீர்ப்பை வழங்குவதற்காக குற்றவியல் நீதி விசாரணை ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அண்மையில், அமைச்சரவையில் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். இதனை

எம்.பி. பதவி பறிபோகும் நிலையில் அத்துரலியே ரத்ன தேரர்!

Posted by - January 21, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்துள்ளதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களிடத்தில் சமூக நோய்கள் வேகமாகப் பரவும் ஆபத்தான நிலைமை-கல்விசாரா ஊழியர்கள் சங்கம்

Posted by - January 21, 2017

பாடசாலை மாணவர்களிடத்தில் சமூக நோய்கள் வேகமாகப் பரவும் ஆபத்தான நிலைமை உருவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும், அனுபவ ரீதியாகவும் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கப்படல் வேண்டும் எனவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படமாட்டாது?

Posted by - January 21, 2017

அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக மாற்றாது சில திருத்தங்களை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களுக்கு தொழில் முன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்-அனோமா கமகே

Posted by - January 21, 2017

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களுக்கு தொழில் முன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார். பயிற்சி இன்றி தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களே பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களுக்கு பயிற்சி வழங்கும் நிலையம் ஒன்றிற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதயத்தால் அழகான மனிதர் அன்னை தெரேசா மட்டுமே : நடராஜன்

Posted by - January 21, 2017

அன்னைத் தெரேசா ஒரு நுட்பமான பிறவி, அவர் ஒர அரசியல் வாதியோ, விஞ்ஞானியோ, அல்ல மக்களுக்காக சேவை செய்வதற்காக பிறந்த ஒரு புனிதர் என இலங்கை. இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம்

Posted by - January 21, 2017

கொழும்பு வெள்ளவத்தையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து  போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.வெள்ளவத்தை Laugfs Super Market முன்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

Posted by - January 21, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படாது போனால், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.