முதலமைச்சர்கள் – மஹிந்த சந்திப்பு தோல்வி

Posted by - January 22, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாகாண சபை முதலமைச்சர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடற்ற நிலையில் நிறைவடைந்தது. இந்த கலந்துரையாடலின் போது, இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திர கட்சி எவ்வாறு போட்டியிட வேண்டும் என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த கலந்துரையாடலின் போது, மஹிந்த ராஜபக்சவுடன் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, மஹிந்த யாப்பா அபயவர்தன மற்றும் காமினி

காவல்துறை அலுவலர் தற்கொலை

Posted by - January 22, 2017

அம்பாறை மங்கலகம காவல்துறை நிலையத்திற்குள் காவல்துறை அலுவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார். மங்கலகம காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த ஒருவரே நேற்று இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு காவல்துறை அலுவலர் கொனாகொல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக கிசிச்சைகளுக்காக அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவமாக மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

நீரில் மூழ்கி மாணவர்கள் பலி

Posted by - January 22, 2017

கம்பொல துன்ஹிந்த பிரதேசத்தில் மகாவெலி கங்கையில் நீராடச்சென்று, காணாமல் போய் இருந்த மூன்று சிறுவர்களும் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் நீராடச் சென்றநிலையில் அவர்களில் மூன்று பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். இந்தநிலையில், காவல்துறையினர், பிரதேச மக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், காணாமல் போனவர்களின் உடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய மூன்று பாடசாலை மணவர்களே இவ்வாறு

மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்குமாறு இரண்டு நாடுகள் அழுத்தம்!

Posted by - January 22, 2017

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு இரண்டு பிரதான நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளை விதிக்கவில்லை! மகிந்த அமரவீர

Posted by - January 22, 2017

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மற்றும் மீன் ஏற்றுமதி தடைகளை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. அவற்றை வழங்க 58 வழிமுறைகளை மட்டும் கையாளுமாறு அறிவித்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அட்டனில் ஆர்பாட்டம்

Posted by - January 22, 2017

ஜல்லிகட்டு விளையாட்டுக்கு இந்திய நீதிமன்றம்   உயர்  நீதிமன்றம் தடைவீதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் தமிழர்ஆர்பாட்டமொன்று  இன்று நடைபெற்றது பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் மிருகவதை சட்டத்தின் கீழ் தடைவித்தித்துள்ளது தடைவிதிப்பை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் இலங்கையில் யாழ்பாணம் கொழும்பு மற்றும் மலையகப்பகுதிகளிலும் ஆதரவு ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் அட்டன் பிரதேச இளைஞர் யுவதிகளின்  ஏற்பாட்டில் தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இந்திய நீதிமன்றத்தி ல்

2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் முறைப்பாடு செய்த சஜித் பிரேமதாச!

Posted by - January 22, 2017

2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில், வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது! மஹிந்த தேசப்பிரிய

Posted by - January 22, 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

லசந்த கொலை தொடர்பில் தெரிந்த அனைத்தையும் கூறிவிட்டேன்!

Posted by - January 22, 2017

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் தனக்கு எதிராக குற்றம்சாட்ட கடந்த அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் முயற்சித்ததாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் சட்ட மூலம் – பெப்ரவரி 3முதல் அமுல்

Posted by - January 22, 2017

தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகதுறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த வார்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும். தகவல் அறிந்துக்கொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டமூலம் கடந்த வருடம் ஜூன் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.