தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகதுறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த வார்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும்.
தகவல் அறிந்துக்கொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டமூலம் கடந்த வருடம் ஜூன் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.