நீரில் மூழ்கி மாணவர்கள் பலி

248 0

1460555061-7573கம்பொல துன்ஹிந்த பிரதேசத்தில் மகாவெலி கங்கையில் நீராடச்சென்று, காணாமல் போய் இருந்த மூன்று சிறுவர்களும் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

5 பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் நீராடச் சென்றநிலையில் அவர்களில் மூன்று பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இந்தநிலையில், காவல்துறையினர், பிரதேச மக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், காணாமல் போனவர்களின் உடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய மூன்று பாடசாலை மணவர்களே இவ்வாறு உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.