லசந்த கொலை தொடர்பில் தெரிந்த அனைத்தையும் கூறிவிட்டேன்!

281 0

Fonsekaலசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் தனக்கு எதிராக குற்றம்சாட்ட கடந்த அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் முயற்சித்ததாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

லசந்தவின் கொலை தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்களே இவ்வாறு தன் மீது குற்றம்சுமத்த முற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்த போது தனக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் தான் கூறியுள்ளதாக, சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.