ரணில் விக்ரமசிங்க கடுமையான தமிழ் இனவாதி – கலகொட அத்தே ஞானசார தேரர்

Posted by - February 1, 2017

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பிரதமர் ஓர் கடுமையான தமிழ் இனவாதியாவார். வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது. நாடு என்ற வாகனத்தை செலுத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள ரணில்

ரஞ்சனின் பிரச்சினைக்கு ஊடகங்களே காரணம் -திஸாநாயக்க

Posted by - February 1, 2017

திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருடன் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடந்து கொண்டது அவரது சுபாவம் எனவும், இதுபோன்ற நடவடிக்கைகளை ஊடகங்கள் வெளியிட்டிருக்கக் கூடாது எனவும் அமைச்சர் எஸ்.பீ.  திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக்  கூறியுள்ளார். தன்னிடமுள்ள சகலதையும் பொதுமக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் ஒருவராக ரஞ்சன் ராமநாயக்கவை நான் காண்கின்றேன் எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசின் கோரமுகத்தை இனம் காட்டுவோம் – பேர்லினில் துண்டுப்பிரசுர போராட்டம்

Posted by - February 1, 2017

எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனமாக நிம்மதியோடும், கௌரவத்தோடும் நம்மை நாமே ஆண்டு வாழ விரும்பும் எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்ற மிக எளிமையான அரசியல் அபிலாசைகளை முன்வைக்கும் தமிழினத்திற்கும் தமிழர்களை அழித்தொழித்து தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தமது சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தினை இலங்கைத் தீவு முழுவதும் நிலைநிறுத்த முனையும் சிங்கள இனத்திற்குமான வேறுபாட்டின் ஆழத்தினை வெளிப்படுத்தும் ஒற்றைப் புள்ளியாகவே சிறிலங்காவின் சுதந்திர தினம் அமைந்துள்ளது. நல்லாட்சியின் பெயரால் எமது தேசிய

ஜாலியன் வாலா பாகும் மெரினா கடற்கரையும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 31, 2017

அது 2017 ஜனவரி 23ம் அல்ல! மெரினா கடற்கரையும் அல்ல! அது 1919 ஏப்ரல் 13. ஜாலியன் வாலா பாக். அன்று பைசாகி தினம். சீக்கியச் சகோதரர்களுக்கு ஏப்ரல் 13 பெருமிதத்துக்குரிய நாள். ‘சீக்கிய அறப்படை’யை (கால்ஸா) குரு கோவிந்த் சிங் நிறுவிய நாள். அந்தப் புனிததினத்தில் தான் அமிர்தசரஸ் பொற்கோயில் அருகிலுள்ள ஜாலியன் வாலா பாகில் அமைதியாகக் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்கள்மீது எந்த முன்னறிவிப்புமின்றி மனிதத்தன்மையே இல்லாத மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டது ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு

ஜனாதிபதி தொடர்பில் ஆருடம் கூறிய ஜோதிடர் கைது

Posted by - January 31, 2017

மக்களை திசை திருப்பும் வகையில் எதிர்வு கூறல்களை வெளியிட்ட ஜோதிடர் விஜித ரோஹன கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளார். அவர், ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கடந்த காலங்களில்; சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது. ஜனாதிபதிக்கு உயிராபத்து உள்ளதாக இவர் ஆருடம் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

கடும் தீர்மானம் விரைவில் – எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்

Posted by - January 31, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விடயம் தொடர்பில் கடும் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது. இந்த தீர்மானத்துக்காக எதிர்வரும் வியாழக்கிழமை தமது சம்மேளனம் கூடவுள்ளதாக, சம்மேளனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளியேறும் மாணவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்ய கொள்ள முடியும் என இன்று முற்பகல் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று அறிவித்தது. மாலபே தனியார் மருத்துவ

ட்ரம்பின் அதிரடி தொடர்கிறது – புதிய பதில் சட்டமா அதிபராக டேனா போயன்டே நியமனம்

Posted by - January 31, 2017

அமெரிக்காவின் புதிய பதில் சட்டமா அதிபராக டேனா போயன்டே நியமிக்கப்பட்டுள்ளார். டேனா போயன்டே அமெரிக்கா வெஜினியாவின் கிழக்கு மாவட்டத்தில் சட்டத்தரணியாக பணியாற்றி வருபவர். இவர் சட்டத்துறையில் 35 வருடங்கள் அனுபவம் கொண்டவராக கருதப்படுகிறார். தமது அகதிகள் கொள்கை தொடர்பில் கேள்வி எழுப்பிய அமெரிக்க முன்னாள் பதில் சட்டமா அதிபர் ஷெல்லி யேட்ஸை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்தார். இதனையடுத்தே புதிய பதில் சட்டமா அதிபாராக டேனா போயன்டே நியமிக்கப்பட்டுள்ளார். பதவி நீக்கப்பட்ட முன்னாள் பதில்

ட்ரம்ப் கொள்கையை கடுமையாக சாடுகிறார் ஒபாமா

Posted by - January 31, 2017

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதி கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அகதிகள் தொடர்பில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் பிரவேசிப்பதற்காக 90 நாட்களுக்கு தடை விதிக்கும் வகையிலான நிறைவேற்று உத்தரவை டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பிறப்பித்திருந்தார். இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றன ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டிலும்

லசந்த கொலையை கோட்டா தலையில் போட அரசாங்கம் முயற்சி – உதய கம்மன்பில

Posted by - January 31, 2017

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையின் பொறுப்பை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மீது திணிக்க அரசாங்கம் முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமையவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார். இன்று ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுகின்றன. இவை கோட்டாபய ராஜபக்சவை இலக்காக கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய

சைட்டம் பட்டம் செல்லுபடியானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - January 31, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளியேறும் மாணவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்ய கொள்ள முடியும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று அறிவித்தது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் இலங்கை மருத்துவ சபையால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த மாணவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளிட்ட