ஜனாதிபதி தொடர்பில் ஆருடம் கூறிய ஜோதிடர் கைது

245 0

மக்களை திசை திருப்பும் வகையில் எதிர்வு கூறல்களை வெளியிட்ட ஜோதிடர் விஜித ரோஹன கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளார்.

அவர், ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கடந்த காலங்களில்; சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

ஜனாதிபதிக்கு உயிராபத்து உள்ளதாக இவர் ஆருடம் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது