ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையின் பொறுப்பை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மீது திணிக்க அரசாங்கம் முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிவித்துரு ஹெல உறுமையவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
இன்று ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுகின்றன.
இவை கோட்டாபய ராஜபக்சவை இலக்காக கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போதைய பிரதமர் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது, லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் சரத் பொன்சோகா பொறுப்பு கூறவேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அது நாடாளுமன்ற பதிவு புத்தகத்தில்; உள்ளது.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடமே மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனினும் அவ்வாறு விசாரணைகள் எதுவும் இதுவரையில் இடம்பெறவில்லை.
இறுதியில் இந்த வழக்கு ரவிராஜ் வழக்கு போல் ஒன்றுமில்லாதவாறு சென்றுவிடும் நிலை ஏற்படும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

