2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள்- ஜயசுந்தர பண்டார

Posted by - February 3, 2017

2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கடமை நேர சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டில் தொழுநோயற்ற நாடு என்ற தொனிப் பொருளில் சுகாதாரம் மற்றும் கல்விப் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கடமை நேர சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார, தொழு நோயாளர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக கூறினார். கடந்த 10 வருடங்களில் எல்லா அண்டுகளும் சுமார் 2000 தொழு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும்

அவன்ற் கார்ட் கப்பலின் தளபதியின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 3, 2017

அவன்ற் கார்ட் கப்பலின் தளபதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற அவன்ற் கார்ட் கப்பலின் தளபதி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலி நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் சந்தேகநபர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபருக்கு தற்போது கண் பார்வை குறைவடைந்து வருவதாகவும் எனவே விசேட வைத்திய நிபுணரிடம் அவருக்கு சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி

70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்பது சந்தேகம்- மஹிந்த ராஜபக்ஸ

Posted by - February 3, 2017

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சுதந்திர தினத்தின் அர்தத்தை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், 2017 பெப்ரவரி 04ம் திகதி, இலங்கையர்களான நாங்கள் அடிபணிந்து இருந்த நிர்வாகத்தில் இருந்து

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும்- தினேஸ் குணவர்தன

Posted by - February 3, 2017

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். தினேஸ் குணவர்தன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தினேஸ் குணவர்தன, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிப்பு(காணொளி)

Posted by - February 3, 2017

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பினால் இலங்கை போக்குவரத்துச் சபை பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்துகளும்

யாழ்ப்பாணத்தில் ப.டெனிஸ்வரனின் கொடும்பாவியை வைத்து போராட்டம்(காணொளி)

Posted by - February 3, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம் சாலைக்கு முன்பாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரனின் கொடும்பாவியை வைத்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெறுகிறது. வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பு இன்று மூன்றாவது நாளாக நடைபெறுகிறது. வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் நேற்று முதல் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஏழு சாலை ஊழியர்களாலும்

நுவரெலியா மாவட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று தொழிற்சங்க நடவடிக்கை(காணொளி)

Posted by - February 3, 2017

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரையான 4 மணித்தியாலயங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில்

வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 3, 2017

வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா வடக்கு மாகாண முதலமைச்சரினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நெல்சிப் திட்டத்தினூடாக 70 இலட்சம் ரூபாவும் நகரசபை நிதியில் 20 இலட்சம் ரூபாவுமாக 90 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட இப் பூங்காவானது வவுனியாவின் முக்கிய தேவையாக காணப்பட்ட பொழுதுபோக்கு அம்சத்திற்கு வழிவகுத்துள்ளது. வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி

உள்ளகப்பொறிமுறையின் கீழ் இருக்ககூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்(காணொளி)

Posted by - February 3, 2017

உள்ளகப்பொறிமுறையின் கீழ் இருக்ககூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா நகர சபையின் பொதுப்பூங்கா திறப்பு விழாவில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய தூய நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 3, 2017

நாட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய தூய நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா திறப்பு விழாவில் உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.அதேபோன்று தூய காற்றை சுவாசிப்பதற்கு கடற்கரை வசதிகளோ திறந்த வெளிகளோ அற்றநிலையில் நரப்பகுதி குழந்தைகள், முதியவர்கள் பொழுதைப்போக்கவும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளதாக முதலமை;சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.