இலங்கை போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம் சாலைக்கு முன்பாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரனின் கொடும்பாவியை வைத்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பு இன்று மூன்றாவது நாளாக நடைபெறுகிறது.
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் நேற்று முதல் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஏழு சாலை ஊழியர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.