வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிப்பு(காணொளி)

409 0

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பினால் இலங்கை போக்குவரத்துச் சபை பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாததால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாதாந்த பருவச் சீட்டு பெற்று பயணங்களை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இவ்வாறான போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.