நுவரெலியா மாவட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று தொழிற்சங்க நடவடிக்கை(காணொளி)

278 0

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரையான 4 மணித்தியாலயங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்ததனால் அங்கு சிகிச்சைக்காக சென்ற பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சில வைத்தியசாலைகளில், வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.