2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள்- ஜயசுந்தர பண்டார

422 0

2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கடமை நேர சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டில் தொழுநோயற்ற நாடு என்ற தொனிப் பொருளில் சுகாதாரம் மற்றும் கல்விப் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கடமை நேர சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார, தொழு நோயாளர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக கூறினார்.

கடந்த 10 வருடங்களில் எல்லா அண்டுகளும் சுமார் 2000 தொழு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலகுவாக அடையாளம் காண முடியுமான மற்றும் குணப்படுத்த முடியுமான தொழு நோய் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.