இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை

Posted by - November 30, 2017

கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் (30) மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தவணை பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நிகழ்ந்தேறிய தமிழீழ தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்.

Posted by - November 29, 2017

தமிழீழ விடுதலை எனும் உயர்ந்த இலட்சியத்தை அடைந்துகொள்ளும் விருப்பினை ஆழ்மனதில் பதித்து, அவ் இலட்சிய வேட்கை கொண்ட தியாகப் பயணத்தில், தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில், காலங்கள் கையளித்த வடிவங்களை ஏற்றுநின்றும், துணிந்து சென்றும் அதி உன்னத கொடையாக தமது உயிர்ப்பூவை வீசி, எங்கள் மனங்களில் கொலுவிருக்கும் உன்னத மாவீரரை ஒருசேர நினைவிருத்தி, வணக்கம் செலுத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் பல்லாயிரம் மக்களின் பங்கேற்புடன், யேர்மனியில் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப் பெற்றது. மாவீரர்களின்

இலங்கை மீனவர்கள் மாலைதீவில் கைது!

Posted by - November 29, 2017

எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையின் மீனவப் படகுகள் இரண்டையும் அதில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பத்து மீனவர்களையும் மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோரப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை கைவிலங்கிட்டு கடத்திச் சென்ற மர்மக் கும்பல்!! திருநெல்வேலியில் பதற்றம்!

Posted by - November 29, 2017

யாழ், பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை தள்ளி விழுத்திக் கைவிலங்கிட்டு ஒரு குழு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முற்பகல் 11 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சுமார் 28 வயதுடையவர் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த சிவில் உடையணிந்த மூவரே இளைஞருக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர் என்றும் கூறப்படுகின்றது.இந்தநிலையில், தம்மால் எவரும்

எமது சிங்களத் தலைவர்களை விட பிரபாகரனே சிறந்த தலைவர்!!- ஞானசார தேரர்

Posted by - November 29, 2017

சிங்களத் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்; விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், இலங்கை இராணுவத்தில் இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும், தமிழ், முஸ்லிமாக இருந்தாலும் மக்களே என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம்.விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தாலும் போராட்ட நோக்கம் சிறந்ததாக

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு!

Posted by - November 29, 2017

பதுளை – மஹியங்கனையில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இன்று (புதன்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. தம்பான பகுதியில் கைப்பற்றப்பட்ட ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற வளாகத்திலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதன்போதே துப்பாக்கி இயங்கியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரனுடன் பிரிட்டன் தூதுவர் சந்திப்பு!

Posted by - November 29, 2017

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டாரீஸ்இடையே இன்று பிற்பகல் 2 மணிக்கு சந்திப்பு ஆரம்பமானது. கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுவருகிறது.

பேச்சுத் தோல்வி போராட்டம் தொடரும்!!

Posted by - November 29, 2017

“இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகரிக்கும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்துக்கும் இடையே வவுனியாவில் இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுக்களின் போது சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. அதனால் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்” இவ்வாறு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதான முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடனடியாக இடமாற்றக்கோரி வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் நேற்று செவ்வாய்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரச பேருந்து சேவைகள்

சட்டவிரோத சிகரட்டுக்களுடன் இளைஞர் ஒருவர் கைது!

Posted by - November 29, 2017

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 23 ஆயிரத்து 400 சிகரட்டுக்களுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தள சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கை வந்த 26 வயதான குறித்த இளைஞன் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி 58 லட்சம் ரூபாய்கள் எனவும், அவை தொலைக்காட்சி பெட்டி மற்றும் மின்விசிரி பெட்டிக்குள் மறைத்துக் கொண்டுவந்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக

மக்களே அவதானம் ; மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

Posted by - November 29, 2017

மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று  திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ்ப்பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன்  இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.