மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு!

329 0

பதுளை – மஹியங்கனையில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இன்று (புதன்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

தம்பான பகுதியில் கைப்பற்றப்பட்ட ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற வளாகத்திலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதன்போதே துப்பாக்கி இயங்கியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

Leave a comment