சட்டவிரோத சிகரட்டுக்களுடன் இளைஞர் ஒருவர் கைது!

539 0

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 23 ஆயிரத்து 400 சிகரட்டுக்களுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தள சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கை வந்த 26 வயதான குறித்த இளைஞன் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி 58 லட்சம் ரூபாய்கள் எனவும், அவை தொலைக்காட்சி பெட்டி மற்றும் மின்விசிரி பெட்டிக்குள் மறைத்துக் கொண்டுவந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளர்.

Leave a comment