கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் விநியோக தடை

280 0

மின்சார சபையின் அத்தியவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பை அண்டிய பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை எட்டு மணி முதல் மாலை ஏழு மணிவரை தொடர்ச்சியாக 11 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி, வத்தளை, பியகம, மஹார, ஜா-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொம்பே மற்றும் கம்பஹ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் நகர சபை மற்றும் அண்டிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் நீர்விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான பிரதான நீர்விநியோக கட்டமைப்பில் புதிய இணைப்பினை ஏற்படுத்துவதற்காக இந்த நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Leave a comment