ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் அழைப்பு!

407 0

யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல்

காலம் – 01.08.2017
நேரம் – பிற்பகல் 04.00 மணி
நிகழ்விடம் – யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கு

நிகழ்வுகள்
பிற்பகல் 03.30 மணி – ஊடகவியலாளர் பொது நினைவுத் தூபியில் மலரஞ்சலி (பிரதான வீதியில், யாழ் நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமை)

பிற்பகல் 04.00 மணி அரங்கு நிகழ்வுகள்
மௌன அஞ்சலி
வரவேற்புரை – வைத்திய கலாநிதி வே.சாரங்கன் – யாழ் போதனா வைத்தியசாலை
தலைமையுரை – திரு. கு.குருபரன் – துறைத்தலைவர், சட்டத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

உருவப்படத்திற்கு மாலை அணிவித்தல் – நிலாவின் பெற்றோர்
நினைவுச் சுடரேற்றல் – நிலாவின் குடும்பத்தினர்
சுடர் அஞ்சலி
மலர் அஞ்சலி
கவிதாஞ்சலி – வைத்திய கலாநிதி வே.சாரங்கன் – யாழ் போதனா வைத்தியசாலை

சிறந்த ஊடகவியல் துறை மாணவனுக்கான சகாதேவன் நிலக்க்ஷன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்; அறிவிப்பும் ஏற்பும்
சிறப்புரை – கலாநிதி மு.சுதாகர் கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

நினைவுரைகள் – திரு.அ. பஞ்சலிங்கம் – ஓய்வுநிலை அதிபர்
திரு. ஆ. சத்தியமூர்த்தி – முகாமையாளர், மக்கள் வங்கி, யாழ்ப்பாணம்.

நினைவுப் பேருரை – தற்கால சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
கலாநிதி எஸ்.ரகுராம் முதுநிலை விரிவரையாளர் மற்றும் இணைப்பாளர் ஊடக கற்கைகள் அலகு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

நன்றியுரை – திரு. அ.யசீகரன் – ஆசிரியர், வாகீசம் இணையம்

அழைப்பு – நிலாவின் நண்பர்கள்

 

Leave a comment