முதலீட்டுச் சபை தலைவர் உப்புல் ஜெயசூரிய இராஜினாமா!

228 0

முதலீட்டுச் சபை தலைவராக செயற்பட்ட சட்டத்தரணி உப்புல் ஜெயசூரிய இராஜினாமா செய்துள்ளார். 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான இவர், தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இராஜினாமா கடிதத்துடன், தனக்கு வழங்கப்பட்ட வாகனத்தையும் தான் ஒப்படைத்துள்ளதாக, அத தெரணவுக்கு வழங்கிய விஷேட செவ்வியில் கூறிய உப்புல் ஜெயசூரிய, தற்போது தனது சொந்த வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் கடமைக் காலத்தில் சில முடிவுகளை எடுக்கும் போது, பல்வேறு அழுத்தங்கள் காணப்பட்டதாகவும், கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாகவும், மனதிற்கு இணக்கம் இன்றி செயற்படுவது சிரமமானது என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், சில முடிவுகளை தன்னால் சுயமாக மேற்கொள்ள முடிந்ததாக நினைவுபடுத்திய அவர், தனக்கு பிரதமர், ஜனாதிபதி மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும் வழங்கிய ஒத்துழைப்பு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment